search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதார வேட்டை"

    கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் பட வாய்ப்பை இழந்ததாகவும், அதனால் கவலை இல்லை என்றும் நடிகை சோனா கூறியிருக்கிறார். #Sona
    தமிழ் பட உலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருப்பவர் சோனா. இவர் மிருகம், குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு, யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக அவருக்கு புதிய படங்கள் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவதார வேட்டை படத்தில் நடித்துள்ளார்.

    இதுகுறித்து சோனா அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு கவர்ச்சியாக நடித்து சலிப்பு ஏற்பட்டு விட்டது. ரசிகர்களும் என்னை கவர்ச்சியாக பார்த்து சலிப்படைந்து இருப்பார்கள். இதனால் இனிமேல் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பது என்றும் முடிவு செய்தேன். நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்த பிறகு புதிய படங்களில் நடிக்க யாரும் அழைக்கவில்லை.



    இதனால் 2 வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். அதுபற்றி கவலைப்படவில்லை. இப்போது மலையாள படங்களில் அதிகமாக நடித்து வருகிறேன். மலையாள படம் என்றதும் தவறாக நினைக்க வேண்டாம். அங்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. குணச்சித்திர வேடங்களில்தான் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அவதார வேட்டை படத்தில் வில்லியாக நடித்து இருக்கிறேன். இந்த படத்துக்கு பிறகு வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க அழைக்கின்றனர். தொடர்ந்து வில்லியாக நடிக்க ஆசை இருக்கிறது.” இவ்வாறு சோனா கூறினார்.
    ஸ்டார் குஞ்சுமோன் இயக்கத்தில் வி.ஆர்.விநாயக் - மீரா நாயர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அவதார வேட்டை' படத்தின் விமர்சனம். #AvatharaVettai #AvatharaVettaiReview #VRVinayak
    தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு உடல் உறுப்புகள் திருடப்படுகிறது. இதனை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் சிறப்பு குழு ஒன்று உருவாக்கப்படுகிறது.

    இதுஒருபுறம் இருக்க, நாயகன் வி.ஆர்.விநாயக் ராதாரவியை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து தப்பிக்கிறார். பின்னர் வேறு ஊருக்கும் செல்லும் விநாயக் அங்கு சோனாவிடம் நற்பெயர் பெற்று அவரிடம் வேலைக்கு சேர்கிறார். விநாயக்குக்கும், அதே ஊரில் போலீசாக இருக்கும் நாயகி மீரா நாயரை பார்க்கும் விநாயக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மீரா நாயர் மூலமாக ராதாரவி தன்னை ஏமாற்றிய விநாயக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதற்கிடையே சோனாவையும் ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கிறார் விநாயக்.



    கடைசியில், மீரா நாயர் விநாயக்கை பிடித்தாரா? விநாயக் யார்? ராதாரவி, சோனாவை ஏமாற்றி ஏன் பணம் பறித்தார்? குழந்தை கடத்தலை போலீசார் கண்டுபிடித்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விநாயக், மீரா நாயர், ராதாரவி, ரியாஸ் கான், சோனா, பவர் ஸ்டார் சீனிவாசன், சம்பத், மகாநதி சங்கர் என படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அவர்களது வேலையை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார்கள்.



    உடல் உறுப்புகள் கடத்தலை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்டார் குஞ்சுமோன். படத்திற்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். படத்தில் காட்சிகள் வலுவானதாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

    மைக்கேலின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். ஏ.காசி விஸ்வாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவுக்கு திருப்திகரமாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `அவதார வேட்டை' கோட்டைவிட்டது. #AvatharaVettai #AvatharaVettaiReview #VRVinayak #RadhaRavi #MeeraNayar #Sona

    அவதார வேட்டை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, சின்மயி மற்றும் மீடூ விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார். #RadhaRavi #Chinmayi
    அவதார வேட்டை என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கம் ஒன்றில் நடைபெற்றது. வி.ஆர்.வினாயக், மீரா நாயர், ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரியாஸ் கான், சோனா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டார் குஞ்சுமோன் இயக்கி உள்ளார். நிகழ்ச்சியில் ராதாரவி பேசியதாவது:-

    ‘சமீபகலாமாக திரைத்துறை பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. நடிகைகளுக்கு மேக்கப் நடுரோட்டிலா போட முடியும்? தனியறையில் தான் போட முடியும். தப்பித்தவறி அந்த அறைக்குள் இயக்குனர் வந்தால் அவரது கதை அவ்வளவுதான். இடுப்பை கிள்ளினார் என்று செய்தி வந்துவிடும். இவை எல்லாம் இப்போது நமக்கு பரபரப்பான செய்திகள் ஆகிவிட்டன.

    இதுபோன்ற செய்திகளுக்கு சட்டமே ஆதரவு தருகிறது. இயக்குனர்கள் மிகவும் சிரமப்பட்டு சினிமாவுக்குள் வருகிறார்கள். அவர்கள் மீது இதுபோன்ற அபாண்டங்களை சுமத்தாதீர்கள். சினிமா என்ற தொழிலை கெடுத்து விடாதீர்கள்.

    இந்த குற்றசாட்டுகளுக்கு ஏதாவது தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்கள். என் மீது கூட வந்தது. நான் இதையெல்லாம் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. என்னை பற்றி இப்போதுதான் புகாரே வந்துள்ளது. சினிமாக்காரர்கள் வீடுகளில் காலாவதியான செக்குகளே மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

    நமக்கு குடும்பமே இல்லை. 30 நாட்கள், 40 நாட்கள் என்று எங்கேயோ சென்று தங்குகிறோம். அப்போது நாம் எல்லோருடனும் தான் பேசுவோம். ஒரு குடும்பமாக இருந்த சினிமா மாறி ஒருவரிடம் மற்றொருவர் பேசவே பயப்படும் நிலை உருவாகி விட்டது.

    ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் படம் சரியாக வராது. ஒற்றுமையாக இருங்கள். ‘மீ டூ’ போன்ற ஆங்கில கலாசாரங்களை இங்கே கொண்டு வர வேண்டாம். நமக்கும் மீடூவுக்கும் தொடர்புஇல்லை.

    அதெல்லாம் பெரிய இடங்களோடு பெரிய மனிதர்களோடு தொடர்புடைய விவகாரம். நமக்கு எதுக்கு அதெல்லாம்? சாலையில் ஆடையுடன் செல்ல வேண்டும் என்பது தான் சட்டம். குளியலறையை எட்டி பார்த்துவிட்டு அந்த சட்டத்தை பிரயோகிக்கக்கூடாது.

    சித்தார்த் தான் சரியான கருத்தை கூறி இருக்கிறார். ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி இருக்கிறார். விஷாலும் சரியான கருத்தை கூறி இருக்கிறார். நடந்ததை அப்போதே சொல்லி இருந்தால் அதற்கு தீர்வு கிடைக்குமே? 10 ஆண்டுகள் கழித்து சொன்னால் எப்படி சரிசெய்ய முடியும்? இதை எல்லாம் பேசுவது சினிமாவுக்கு அசிங்கம்.

    எங்கள் குடும்பமே வில்லன் குடும்பம். எனவே எங்களை பற்றி இதுபோன்ற புகார் வந்தால் மக்கள் எளிதில் நம்பிவிடுவார்கள். நான் இது தொடர்பாக கோர்ட்டுக்கே செல்லக்கூட தயாராக இருக்கிறேன். சாமியார்களிடம் போய் கெட்டுபோய் வருபவர்கள் தான் வெளியில் வந்து மற்றவர்களை புகார் சொல்கிறார்கள்.

    சின்மயி உள்பட அனைவருக்கும் ஒரு கோரிக்கை. புகார் சொல்வதால் உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். எப்போதோ நடந்ததை இப்போது வெளிபடுத்தினால் அது உங்களுக்கு தான் பாதிப்புகளை ஏற்படுத்தும். புகார் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறும் வரை யாரும் குற்றவாளி இல்லை’.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×